Published : 08 Jan 2021 06:53 AM
Last Updated : 08 Jan 2021 06:53 AM
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் செல்ல நாளொன்றுக்கு 25 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே ஆன்லைன் மூலம் அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழநியில் தைப்பூசத் திருவிழா ஜன.22-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக பழநி நோக்கி வருகை தருவார்கள்.
கரோனா கட்டுப்பாடுகள் தற்போது அமலில் உள்ளதால் கோயிலுக்கு வர ஆன்லைனில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். நாளொன்றுக்கு 25 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
65 வயதுக்கு மேற்பட்டோர், கர்ப்பிணிகள், குழந்தைகள் கோயிலுக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும். முகக் கவசம் அணிந்திருந்தால் மட்டுமே கோயில் வளாகத்துக்குள் அனுமதிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியூர் பக்தர்கள் கிடையாது
தைப்பூசத் தேரோட்டம் உள்ளூர் பக்தர்களுடன் மட்டுமே நடைபெறும். வெளியூர் பக்தர்களுக்கு அனுமதியில்லை. இதனால், தொலைக்காட்சி, சமூக வலைதளங்கள் மூலம் தேரோட்டத்தை ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுஉள்ளன.எடப்பாடியைச் சேர்ந்த 5,000 பக்தர்கள் மலைக்கோயிலில் ஒரு நாள் இரவு தங்குவது வழக்கம். இந்த முறை 500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என திண்டுக்கல் ஆட்சியர் மு.விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT