Published : 07 Jan 2021 03:16 AM
Last Updated : 07 Jan 2021 03:16 AM

எப்போதும்வென்றான் அருகே பாதயாத்திரை பக்தர்கள் 2 பேர் லாரி மோதி உயிரிழப்பு

எப்போதும்வென்றான் அருகே லாரி மோதியதில் திருச்செந்தூருக்கு பாதயாத்திரை சென்ற 2 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

எட்டயபுரம் அருகே மேலஈரால் கிராமத்தைச் சேர்ந்த அழகப்பன் மகன் முத்துராஜ்(40). திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு மாலை அணிந்து விரதமிருந்து வந்த 40 பேர், இவரது தலைமையில் நேற்று முன்தினம் இரவுதிருச்செந்தூருக்கு பாதயாத்திரை புறப்பட்டனர். எப்போதும்வென்றான் சிவஞானபுரம் விலக்குஅருகே அவர்கள் நடந்து சென்றபோது, பின்னால் இருந்து வந்தலாரி எதிர்பாராதவிதமாக பாதயாத்திரை சென்ற பக்தர்கள் கூட்டத்துக்குள் புகுந்தது.

இதில், மேலஈராலை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் மகன் முகேஸ்குமார்(12), பண்டாரம் மகன் குமார்(33) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், கடலையூர் சுப்பிரமணியன் மகன்அங்கப்பன்(23), தமிழ்ச்செல்வன்(23), மேலஈரால் சித்திரைசெல்வம் மகன் ஆதிமேகான்(13), முருகன் மகன் ராகுல்(12), தெற்கு திட்டங்குளம் கண்ணன் மகன் பிரேம்குமார்(17) ஆகியோர் 5 பேர் காயமடைந்தனர். எப்போதும் வென்றான் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய லாரி ஓட்டுநரை போலீஸார் தேடி வருகின்றனர்.

எப்போதும்வென்றான் சிவஞானபுரம் விலக்குஅருகே அவர்கள் நடந்து சென்றபோது, பின்னால் இருந்து வந்த லாரி எதிர்பாராதவிதமாக பாதயாத்திரை சென்ற பக்தர்கள் கூட்டத்துக்குள் புகுந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x