Published : 02 Jan 2021 03:23 AM
Last Updated : 02 Jan 2021 03:23 AM

டிசம்பர் மாதம் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.15 லட்சம் கோடியாக உயர்வு அறிமுகமான பிறகு முதல் முறை சாதனை

புதுடெல்லி

சரக்கு மற்றும் சேவை வரி கடந்த டிசம்பர் மாதத்தில் ரூ.1.15 லட்சம் கோடியை எட்டியுள்ளது. ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து இதுவரையில் இல்லாத அதிகபட்ச வசூலாக இது பதிவாகியுள்ளது. சென்ற ஆண்டு டிசம்பர் வசூலைக் காட்டிலும் 12 சதவீத வளர்ச்சி பதிவாகியுள்ளது.

கரோனா பாதிப்பு காரணமாக எடுக்கப்பட்ட ஊரடங்கு நடவடிக்கையால் தொழில்கள் பாதிக்கபட்டு அரசின் வரி வருவாயும் பாதிக்கப்பட்டது. ஆனால் டிசம்பரில் ஜிஎஸ்டி வருவாய் மீண்டும் கரோனாவுக்கு முந்தைய நிலையை எட்டியுள்ளது. டிசம்பர் மாதத்தில் ரூ.1,15,174 கோடி ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது. இதில் சிஜிஎஸ்டி ரூ.21,365 கோடி, எஸ்ஜிஎஸ்டி ரூ.27,804 கோடி, ஐஜிஎஸ்டி ரூ.57,426 கோடியாகவும் உள்ளது. செஸ் வரி ரூ.8,579 கோடி வசூலாகியுள்ளது.

ஐஜிஎஸ்டியில் இருந்து ரூ.23,276 கோடி சிஜிஎஸ்டிக்கும், ரூ.17,681 கோடி எஸ்ஜிஎஸ்டிக்கும் பகிரப்பட்டுள்ளது. இதன்மூலம் டிசம்பரில் மத்திய அரசுக்கு ரூ.44,641 கோடியும் மாநில அரசுகளுக்கு ரூ.45,485 கோடியும் வருவாயாகக் கிடைத்துள்ளது.

ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து இதுவரை 21 மாதங்களில் 3 மாதங்கள் மட்டுமே ரூ.1.1 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x