Published : 31 Dec 2020 03:18 AM
Last Updated : 31 Dec 2020 03:18 AM

சசிகலாவுடன் இணைந்து செயல்பட வாய்ப்பே இல்லை இரட்டை இலையை யாரும் முடக்க முடியாது அமைச்சர் டி.ஜெயக்குமார் திட்டவட்டம்

சென்னை மந்தைவெளியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் டி.ஜெயக்குமார், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நடிகர் ரஜினிகாந்த் தனது உடல்நிலை கருதி கட்சி தொடங்கப் போவதில்லை என்று கூறியுள்ளார். எனவே, அவர் நீண்ட ஆயுளுடன், பூரண நலத்துடன் சேவையாற்ற வேண்டும் என்று கூறியுள்ளோம். அவர் கட்சி தொடங்காத நிலையில் அதைப் பற்றி கருத்து கூற தேவையில்லை. எங்கள் கட்சியின் வாக்குகள் எப்போதும் பிரியாது. தமிழக மக்கள் எங்களுக் குத்தான் சாதகமாக உள்ளனர்.

அதிமுக எஃக்கு கோட்டை. அதை யாராலும் அசைக்க முடியாது. திமுகவில் உட்கட்சி பூசல் உள்ளது. அங்கு வாரிசுகள்தான் பொறுப்புக்கு வர முடியும். ஆனால் அதிமுகவில் கொடிபிடிக்கும் தொண்டன்கூட முதல்வராக வர முடியும்.

பொங்கல் பரிசாக ரூ.2,500 வழங்குவதை தடுக்க அவர் முயற்சி செய்து வருகிறார். திமுக ஆட்சியில் பொங்கல் பையில் சின்னம் போட்டுதான் பொருட்கள் கொடுத்துள்ளனர்.

டோக்கனில் அமைச்சர்கள் படம், பெயர் இடம்பெற்றிருந்தால், அது அரசைதான் குறிக்கும். எம்ஜிஆர், ஜெயலலிதா, முதல்வர் படம் இடம்பெற்றால் என்ன தவறு. கட்சி சின்னமோ, கொடியோ இடம் பெற்றிருந்தால்தான் அது விதி மீறலாகும்.

எம்ஜிஆர், ஜெயலலிதாவால் பாதுகாக்கப்பட்ட இரட்டை இலைசின்னம் தமிழகத்தின் அடை யாள சின்னம். இதை எந்த கொம்பனாலும் முடக்க முடியாது. சசிகலா சிறையில் இருந்து வந்தாலும் அதிமுக – அமமுக இணைவது என்பதே கிடையாது. அந்த நிலையில் இருந்து அதிமுக தன்னை மாற்றிக் கொள்ளாது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x