Published : 31 Dec 2020 03:19 AM
Last Updated : 31 Dec 2020 03:19 AM

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு புதுச்சேரி அரசு மருத்துவக்கல்லூரியில் இலவச கரோனா பரிசோதனை முதல்வர் நாராயணசாமி உத்தரவு

சபரிமலை செல்லும் புதுச்சேரி பக்தர்கள் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இலவசமாக கரோனா பரிசோதனை செய்து சான்று பெறலாம்.

சபரிமலைக்கு இணைய வழி யாக முன்பதிவு செய்து யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள் கரோனா பரிசோதனை செய்ய வேண்டும். கரோனா தொற்றில்லை என்ற சான்றுடன் வர கேரள அரசு நிபந்தனை விதித்துள்ளது. முன்பதிவு செய்துள்ள பக்தர்கள் இந்த சான்று பெற காலதாமதம் ஆகிறது. ஜிப்மரில் இதற்கான கட்டணம் ரூ. 2,500 ஆக உள்ளது.இதைத்தவிர்க்க அரசு மருத்துவ மனைகளில் குறைந்த கட்டணத்தில் கரோனா பரிசோதனை செய்து சான்று தர நடவடிக்கை எடுக் குமாறு புதுச்சேரி முதல்வர் நாரா யணசாமியிடம் ஐயப்ப சேவா சங்கத்தினர் நேற்று கோரிக்கை வைத்திருந்தனர்.

இதையடுத்து சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களுக்கு புதுச்சேரி இந்திராகாந்தி அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் இலவசமாக பரி சோதனை செய்து சான்று தர சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் மோகன்குமாருக்கு முதல்வர் நாராயணசாமி உத்தரவிட் டுள்ளார்.

சபரிமலைக்கு இணைய வழியாக முன்பதிவு செய்து யாத் திரை செல்லும் புதுச்சேரி ஐயப்ப பக்தர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தலாம் என்று முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கரோனா தொற்றில்லை என்ற சான்றுடன் வர கேரள அரசு நிபந்தனை விதித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x