Published : 30 Dec 2020 03:17 AM
Last Updated : 30 Dec 2020 03:17 AM
கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் தமிழகத்துக்கு ரூ. 18,188கோடி மட்டுமே முதலீடுவந்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக நேற்றுஅவர் வெளியிட்ட அறிக்கை:
நூற்றுக்கணக்கில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டுவிட்டோம். கோடிக்கணக்கில் முதலீடுகளை ஈர்த்து விட்டோம்என்று முதல்வர் பழனிசாமி திரும்பத் திரும்ப கூறி வந்தார்.அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகுகடந்த 10 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் கோடி முதலீடுவரும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், வெறும் 9.4 சதவீதம் மட்டும்தான் அதாவது,ரூ.18,188 கோடி முதலீடுகள் மட்டுமே வந்துள்ளன.
கடந்த 10 ஆண்டு காலஅதிமுக ஆட்சியில் பெற்ற முதலீடுகள், ஆண்டுக்கு ரூ.1,800 கோடிதான் என்பதுவெட்ட வெளிச்சமாகிவிட்டது. இரு உலக முதலீட்டாளர்கள் மாநாடு, முதல்வர், அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்களின்போது இதுவரை போட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டுக்கு வரவில்லை என்பது வெளிவந்துவிட்டது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT