Published : 29 Dec 2020 03:14 AM
Last Updated : 29 Dec 2020 03:14 AM
சுற்றுச்சூழல் அதிகாரி பாண்டியனிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் 6 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர்.
சுற்றுச்சூழல் அதிகாரி பாண்டியன் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு லஞ்ச ஒழிப்புபோலீஸார் அவருக்கு சம்மன் அனுப்பினர். இதையடுத்து, சென்னை ஆலந்தூரில் உள்ளலஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் பாண்டியன் நேற்று ஆஜரானார். அவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
பாண்டியன் மூலம் வேறு சிலஅதிகாரிகளும் லஞ்சம் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதுபற்றி லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் பாண்டியன் கூறியுள்ளதாகவும், விரைவில் அவர்களது வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படு கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT