Published : 26 Dec 2020 03:14 AM
Last Updated : 26 Dec 2020 03:14 AM

வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகளுடன் திறந்த மனதுடன் பேசத் தயார் ‘பி.எம்.கிசான்’ திட்டத்தில் ரூ.18 ஆயிரம் கோடியை விடுவித்து பிரதமர் மோடி அறிவிப்பு

நாடு முழுவதும் 9 கோடி விவசாயி களுக்கு ரூ.18 ஆயிரம் கோடி நிதியுத வியை வழங்கிய பிரதமர் நரேந்திர மோடி, விவசாயிகளுடன் திறந்த மனதுடன் பேச்சு நடத்த மத்திய அரசு தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

‘பிரதமர் கிசான் சம்மான் நிதி’ திட்டத்தின்கீழ் சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படுகிறது. ஓராண்டில் தலா ரூ.2 ஆயிரம் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் இந்த நிதி செலுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின்கீழ், 2021-ம் ஆண்டுக்கான முதல் தவணைத் தொகையாக நாடு முழுவதும் 9 கோடி விவசாயிகளுக்கு ரூ.18 ஆயிரம் கோடி நிதியுதவியை பிரதமர் நரேந்திர மோடி நேற்று விடுவித்தார். அப்போது காணொலி காட்சி மூலம் விவசாயிகளிடம் பிரதமர் கலந்துரையாடினார். பிரதமரின் உரையை கேட்க நாடு முழு வதும் 19 ஆயிரம் இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பிரம் மாண்ட திரையில் பிரதமரின் உரை ஒளிபரப்பு செய்யப்பட்டது. அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:

விவசாயிகளுக்கான நிதியுதவி நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கு களில் செலுத்தப்படுகிறது. விவசாயி களுக்கான நிதியுதவியை இடைத்தரகர் கள், வேறு யாரும் அபகரிக்க முடியாது. இன்றைய தினம் 9 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக ரூ.18 ஆயிரம் கோடி செலுத்தப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் ‘பிரதமர் கிசான் சம்மான் நிதி’ திட்டத்தில் 23 லட்சம் விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி கிடைக்கவிடாமல் மம்தா பானர்ஜி அரசு தடுத்து வருகிறது. முதல்வர் மம்தா பானர்ஜி விவசாயிகளுக்கு துரோ கம் இழைக்கிறார். ஆனால், அவர் உள்நோக்கத்துடன் பஞ்சாப் விவசாயி களுக்கு ஆதரவு தெரிவிக்கிறார். மம்தா வின் தவறான கொள்கைகளால் மேற்கு வங்கம் அழிந்து கொண்டிருக்கிறது.

மத்தியில் பாஜக அரசு பதவியேற்ற பிறகு நாடு முழுவதும் 1,000 வேளாண் சந்தைகள் ஆன்லைனில் இணைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் நடந்துள்ளது.

குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டத்தில் ஒன்றரை மடங்கு அதிகமாக விவசாயிகளுக்கு பணம் அளித்து வரு கிறோம். கடந்த ஆட்சிகளில் குறிப்பிட்ட விளைபொருட்கள் மட்டுமே குறைந்த பட்ச ஆதரவு விலை திட்டத்தில் கொள்முதல் செய்யப்பட்டன. பாஜக அரசு பதவியேற்ற பிறகு மேலும் பல்வேறு விளைபொருட்களை பட்டியலில் சேர்த்துள்ளோம்.

இடைத்தரகர்கள் ஒழிப்பு

புதிய வேளாண் சட்டங்கள் மூலம் இடைத்தரகர்கள் முற்றிலுமாக ஒழிக்கப் படுவர். எந்த இடத்தில் நல்ல விலை கிடைக்கிறதோ அங்கு விவசாயிகள் தங்கள் வேளாண் விளை பொருட் களை விற்பனை செய்ய வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. விவசாயியின் சொந்த மாநிலத்தில் நல்ல விலை கிடைக்கவில்லை என்றால் இதர மாநிலங்களில் விற்கலாம். விவசாயிகள் ஒன்றாக இணைந்து சங்கங்களை உரு வாக்கி அவற்றின் மூலமாக விளை பொருட்களை விற்கலாம். பிஸ்கெட், சிப்ஸ், ஜாம் உள்ளிட்ட பொருட்களை விவசாயிகளே உற்பத்தி செய்து விற்க முடியும். வெளிநாடுகளுக்கும் நேரடியாக ஏற்றுமதி செய்ய முடியும்.

வேளாண் சட்டங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் வதந்திகளையும் பொய் களையும் பரப்பி வருகின்றன. அப்பாவி விவசாயிகளை தவறாக வழிநடத்தி வருகின்றன. புதிய வேளாண் சட்டங்களின் படி விவசாயிகளின் கையே ஓங்கியிருக்கும். விவசாயிகள் மீது வியாபாரிகள், நிறுவனங்கள் எந்த வகையிலும் ஆதிக்கம் செலுத்த முடியாது.

வேளாண் ஒப்பந்தங்களை பொறுத்தவரை விவசாயிகள் நினைத் தால் மட்டுமே அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியும். அதேநேரம் வியாபாரிகள், நிறுவனங்களால் ஒப்பந்தத்தை தன்னிச்சையாக ரத்து செய்ய முடியாது.

முந்தைய சட்டங்களின்படி வேளாண் ஒப்பந்தங்களை ரத்து செய்தால் விவசாயிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. புதிய வேளாண் சட்டங் களில் விவசாயிகளுக்கு எவ்வித அபராதமும் விதிக்கப்படாது.

ஒப்பந்த சாகுபடி திட்டத்தின் மூலம் விவசாயிகளின் நிலங்கள் பறிக்கப்படும் என்று வதந்தி பரப்பப்படுகிறது. இந்த திட்டம் பல மாநிலங்களில் ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, பால் உற்பத்தியில் ஒப்பந்த நடைமுறை மிகப்பெரிய வெற்றி அடைந்திருக் கிறது. இதற்காக பால் உற்பத்தி நிறு வனங்கள், விவசாயிகளை ஆட்டிப் படைக்கிறதா?

சில எதிர்க்கட்சித் தலைவர்கள் விவ சாயிகளின் நலனுக்காக ஓங்கி குரல் எழுப்புகின்றனர். அவர்களின் பெயர் கள் நிலஅபகரிப்பு வழக்குகளில் வெளி வந்ததை யாரும் மறந்திருக்க மாட் டார்கள். புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகளிடம் திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு எப்போதும் தயாராக உள்ளது.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x