Published : 26 Dec 2020 03:14 AM
Last Updated : 26 Dec 2020 03:14 AM
சென்னையில் உள்ள சுரானாநிறுவனத்தில் கடந்த 2012-ல்சோதனை நடத்திய சிபிஐ அதிகாரிகள், 400 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்து, அதே நிறுவனத்தில் உள்ள 72 லாக்கர்களில் வைத்து சீலிட்டனர். லாக்கர்சாவிகள் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன.
சமீபத்தில், லாக்கர்களை பார்த்தபோது, 103 கிலோ தங்கத்தை காணவில்லை. இதுகுறித்து விசாரணை தொடங்கியுள்ள சிபிசிஐடி, திருட்டு வழக்கு பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக சிபிசிஐடி சிறப்புபுலனாய்வு பிரிவு எஸ்.பி. விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில், டெல்லியில் இருந்து வந்துள்ள சிபிஐ சிறப்பு பிரிவினரும் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT