Published : 24 Dec 2020 07:23 AM
Last Updated : 24 Dec 2020 07:23 AM

ராணிப்பேட்டை பெல் நிறுவனத்துக்கு தங்க பதக்கம்

ராணிப்பேட்டை: மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கிய ராணிப்பேட்டை பெல் நிறுவனத்துக்கு தமிழக அரசு சார்பில் விருது வழங்கப்பட்டது.

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்புகளை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் தொழில் நிறுவனத்துக்கு தமிழக அரசு சார்பில் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 2019-ம் ஆண்டில் அதிக அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு களை வழங்கியதாக ராணிப்பேட்டை பெல் நிறுவனம் தேர்வு செய்யப்பட் டுள்ளது. இதைத்தொடர்ந்து, சென்னை தலைமைச் செயலகத்தில் விருது வழங்கும் விழா கடந்த 21-ம் தேதி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா முன்னிலை வகித்தார். தமிழக முதல்வர் பழனிசாமி தலைமை வகித்து, ராணிப்பேட்டை பெல் நிறுவனத்துக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கத்தை வழங்கி கவுரவித்தார். இந்த விருதினை கூடுதல் பொது மேலாளர் ராஜூ, துணை பொது மேலாளர் சோமநாதன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x