Published : 23 Dec 2020 03:16 AM
Last Updated : 23 Dec 2020 03:16 AM
தமிழகத்தில் புதிதாக 1,052 பேர்கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதுதொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் நேற்று ஆண்கள் 638, பெண்கள் 414 என மொத்தம் 1,052 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 311, கோவையில் 114 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு8 லட்சத்து 9,014 ஆக அதிகரித் துள்ளது.
இதுவரை சென்னையில் 2 லட்சத்து 15,898 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 7 லட்சத்து 87,611பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் சென்னையில் 295 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 1,139 பேர் குணமடைந்தனர்.
அரசு மருத்துவமனைகளில் முதியவர்கள் உட்பட 10 பேர், தனியார் மருத்துவமனைகளில் 7 பேர்என நேற்று 17 பேர் உயிரிழந்தனர்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT