Published : 22 Dec 2020 03:15 AM
Last Updated : 22 Dec 2020 03:15 AM
இந்தியாவின் பாட்மிண்டன் நட்சத்திரங்களான பி.வி.சிந்து, சாய்னா நெவால் உள்ளிட்ட 8 பேர் தாய்லாந்து ஓபன், உலக டூர் பைனல்ஸ் உள்ளிட்ட 3 தொடர்களில் பங்கேற்க உள்ளனர்.
ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதை கருத்தில் கொண்டு வரும் ஜனவரி மாதம் முதல் நடைபெற உள்ள 3 பாட்மிண்டன் தொடர்களுக்கான 8 பேர் கொண்ட வலுவான அணியை இந்திய பாட்மிண்டன் சங்கம் அறிவித்துள்ளது. இதில் பி.வி.சிந்து, சாய்னா நெவால், சாய் பிரணீத், கிடாம்பி காந்த், சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி, அஸ்வினி பொன்னப்பா, ஷிக்கி ரெட்டி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இவர்கள் வரும் ஜனவரி 12 முதல் 17 வரை தாய்லாந்தில் நடைபெறும் யோனக்ஸ் தாய்லாந்து ஓபன், 19-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடைபெறும் டொயோட்டா தாய்லாந்து ஓபன் ஆகிய தொடர்களிலும் 27-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெறும் பிடபிள்யூஎஃப் உலக டூர் பைனல்ஸ் தொடரிலும் பங்கேற்க உள்ளனர்.
கரோனா வைரஸ் பெருந்தொற்றால் 9 மாதங்களுக்குப் பிறகு ஜனவரியில் நடைபெற உள்ள இந்த 3 தொடர்களின் வாயிலாக சர்வதேச போட்களில் களமிறங்குகின்றனர் இந்திய பாட்மிண்டன் நட்சத்திரங்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT