Published : 21 Dec 2020 03:14 AM
Last Updated : 21 Dec 2020 03:14 AM

சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்காக ரூ.1 கோடியில் தட்டுகளை கொள்முதல் செய்ய டெண்டர்

தமிழகம் முழுவதும் 43,283 சத்துணவு மையங்கள் உள்ளன. இந்த சத்துணவு மையங்கள்மூலம், 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வந்தது. கரோனா காரணமாகஊரடங்கு அமல்படுத்தப்பட்ட தால் பள்ளிகள் மூடப்பட்டன. இதைத் தொடர்ந்து சத்துணவு மையங்களும் இயங்கவில்லை.

இந்நிலையில், பள்ளிகள்திறந்தவுடன் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு வழங்குவதற்காக ஸ்டீல் தட்டுகள் கொள்முதல் செய்ய சமூகநலத் துறை டெண்டர் கோரியுள்ளது.

இதுதொடர்பாக, சமூக நலத்துறை அதிகாரிகள் கூறியபோது, “நடப்பு ஆண்டு ரூ.1.22 கோடியில் 1.36 லட்சம் ஸ்டீல் தட்டுகள் கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது. டெண்டர் தாக்கல் செய்ய கடந்த8-ம் தேதி முதல் 22-ம் தேதி(நாளை) வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. நாளை பிற்பகல்டெண்டர் இறுதி செய்யப்படும். பள்ளிகள் திறந்தவுடன் தேவையான மாணவர்களுக்கு புதிய தட்டுகள் வழங்கப்படும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x