Published : 17 Dec 2020 03:16 AM
Last Updated : 17 Dec 2020 03:16 AM

டெல்லியில் நடந்துவரும் விவசாயிகள் போராட்டத்துக்கு தீர்வு காண பிரதிநிதிகள் குழு அமைக்க வேண்டும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

டெல்லி – உத்தரபிரதேச எல்லையான காஸிப்பூரில் போராட்டம் நடத்தி வரும் விவசாய சங்கங்களின் தலைவர்கள் நேற்று ஆலோசனை நடத்தினர். படம்: சந்தீப் சக்சேனா

புதுடெல்லி

டெல்லியில் நடந்து வரும் விவசாயி கள் போராட்டத்துக்கு தீர்வு காண, அரசு மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மத்திய அரசு இயற்றிய 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணா மாநிலங் களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 20 நாட்களுக்கும் மேலாக நடந்துவரும் இந்தப் போராட்டத்தால் டெல்லி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் போராடும் விவசாயி களுக்கு ஆதரவாக மற்ற மாநிலங் களிலும் விவசாய சங்கங்கள் போராட்டங்களை நடத்தி வரு கின்றன.

இந்தப் போராட்டத்தை முடி வுக்கு கொண்டு வருவதற்காக, விவசாய சங்கப் பிரதிநிதிகளிடம் மத்திய அரசு சார்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன. இரு தரப்பிலும் தங்கள் முடிவுகளில் உறுதியாக இருப்பதால் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை தாமதமாகி வருகிறது.

இதனிடையே, விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜ ராகி, ‘‘விவசாயிகளின் வாழ்வா தாரத்தை மேம்படுத்தும் நோக்கி லேயே 3 புதிய வேளாண் சட்டங் களும் இயற்றப்பட்டுள்ளன. அது மட்டுமின்றி, விவசாயிகளின் கோரிக்கையை கேட்பதற்கும், அவர்களின் சந்தேகத்தை நிவர்த்தி செய்வதற்கும் மத்திய அரசு எப்போதும் தயாராக உள்ளது.

ஆனால், அரசுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்த விவசாயி கள் தயாராக இல்லை. பல்வேறு துறைகளைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டனர். எனினும், பேச்சுவார்த்தையில் அவர்களுக்கு ஆர்வமில்லை’’ என வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர், நீதிபதிகள் பிறப் பித்த உத்தரவில் கூறியிருப்ப தாவது:

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு பல கட்டங்களாக பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறது. ஆனால், விவசாயிகளின் அச்சங் களை புரிந்துகொண்டு, திறந்த மனதுடன் மத்திய அரசு பேச்சு வார்த்தை நடத்தாத வரை, இந்தப் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாது. அடுத்து நடக்க உள்ள பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடி வதற்கே வாய்ப்பு உள்ளது.

மத்திய அரசு இதுபோன்ற அணுகுமுறையை கடைபிடித்து வந்தால், இந்த விவகாரம் தேசிய பிரச்சினையாக உருவாகிவிடும். எனவே, இப்பிரச்சினைக்கு பேச்சு வார்த்தை மூலம் விரைவில் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி, இந்த விவ காரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மத்திய அரசு பிரதி நிதிகள் மற்றும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் அடங்கிய ஒரு குழுவை ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, விவசாயிகள் போராட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மனுக் களுக்கு இன்று (வியாழக்கிழமை) பதிலளிக்குமாறு மத்திய அரசு மற்றும் டெல்லி, பஞ்சாப், ஹரியாணா மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

3 மாநிலங்களுக்கு மட்டும் விதிவிலக்கா?

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் தீவிரம் அடைந்துவரும் நிலையில், பஞ்சாப், ஹரியாணா, உ.பி. ஆகிய மாநிலங்களுக்கு இந்த சட்டங்களில் இருந்து விதிவிலக்கு அளிப்பது குறித்து மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக நேற்று காலை தகவல் வெளியானது.

இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறும்போது, “விவசாயிகள் போராட்ட விவகாரத்தில் அரசு ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்பு பல்வேறு வாய்ப்புகளையும் விவாதித்து வருகிறது. வேளாண் சட்டங்களில் இருந்து பஞ்சாப், ஹரியாணா, உ.பி. ஆகிய 3 மாநிலங்களுக்கு விதிவிலக்கு அளிப்பதும், எம்எஸ்பி (குறைந்தபட்ச ஆதரவு விலை) நடைமுறை தொடரும் என்ற உத்தரவாதம் அளிப்பதும் இதில் ஒன்றாகும். இது தொடர்பாகவும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்க வாய்ப்புள்ளது’’ என்று தெரிவித்தன.

இந்த தகவலால் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், 3 மாநிலங்களுக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக அமைச்சரவையில் எதுவும் விவாதிக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியாகவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x