Published : 15 Dec 2020 03:15 AM
Last Updated : 15 Dec 2020 03:15 AM

சுங்கச் சாவடிகளை அகற்றக் கோரி வி.சி கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தொப்பூர் சுங்கச் சாவடியை அகற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் பாளையம் சுங்கச் சாவடி அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வி.சி கட்சியின் தலைமை நிலைய செயலாளர் தமிழ்செல்வன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் போது, ஏழை, எளிய மக்கள், சிறு, குறு விவசாயிகள், சரக்கு வாகன உரிமையாளர்கள் உள்ளிட்டோர் பாதிப்படையும் வகையில் சுங்கச் சாவடி நிர்வாகம் முறைகேடு செய்து வருகிறது. எனவே, தொப்பூர் சுங்கச் சாவடி உட்பட நாடு முழுக்க உள்ள தேசிய நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளை மத்திய அரசு அகற்ற வேண்டும் என்று பலரும் வலியுறுத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலாளர்கள் ஜானகிராமன், ஜெயந்தி, மாநில ஒழுங்கு நடவடிக்கைக் குழு செயலாளர் பாவேந்தன், மாவட்ட துணை செயலாளர் மின்னல் சக்தி, அரூர் சட்டப் பேரவை தொகுதி செயலாளர் சாக்கன் சர்மா, கோவேந்தன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் 10 பெண்கள் உட்பட 54 பேரை போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x