Published : 14 Dec 2020 03:14 AM
Last Updated : 14 Dec 2020 03:14 AM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மானாம்பள்ளி வனச் சரகத்துக்கு உட்பட்ட சேடல்டேம் பகுதியில் வசித்து வருபவர் பத்மநாபன் (56) இவரது தந்தை ராசு (75). நேற்று காலை மகனின் வீட்டில் இருந்து சோலையாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிக்கு ராசு சென்றுகொண்டிருந்தார். அங்குள்ள புதரில் மறைந்திருந்த கரடி தாக்கியதில் அவர் பலத்த காயமடைந்தார்.
சம்பவ இடத்துக்கு சென்ற வனத் துறையினர் ராசுவை மீட்டு, வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு ராசு கொண்டு செல்லப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT