Published : 12 Dec 2020 03:16 AM
Last Updated : 12 Dec 2020 03:16 AM

ஆஸி. ஏ அணியுடன்பகலிரவு ஆட்டத்தில் இந்தியா அசத்தல்

ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான மூன்று நாட்கள் கொண்ட பிங்க் பந்து பயிற்சி ஆட்டமானது சிட்னியில் நேற்று தொடங்கியது. முதலில் பேட் செய்த இந்திய அணி 48.3 ஓவர்களில் 194 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

123 ரன்களுக்கு 9 விக்கெட்களை தாரை வார்த்த நிலையில் ஜஸ்பிரீத் பும்ரா 55 ரன்கள் விளாசினார். இதன் காரணமாகவே இந்திய அணி 190 ரன்கள் வரை சேர்க்க முடிந்தது. இதையடுத்து பேட் செய்த ஆஸ்திரேலியா ஏ அணி 32.1 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்திருந்தது.

இந்தி அணி சார்பில் மொகமது ஷமி, நவ்தீப் ஷைனி ஆகியோர் தலா 3 விக்கெட்களையும் பும்ரா 2, மொகமது சிராஜ் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். இன்று 2-வது நாள் ஆட்டம் தொடர்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x