Published : 12 Dec 2020 03:17 AM
Last Updated : 12 Dec 2020 03:17 AM

பொறியியல் மாணவர்களுக்கு ஏப்ரல் வரை ஆன்லைன் வகுப்பு அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

பொறியியல் கல்லூரிகளுக்கு ஏப்ரல் மாதம் வரை இணையவழியில் மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம் அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:

கரோனா பரவலால் நடப்பு கல்வி ஆண்டு முழுவதும் இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கான வகுப்புகள் இணையவழியில் தொடரும்.

இறுதி ஆண்டு தவிர்த்து இதர மாணவர்களுக்கு 2021 ஏப்ரல்வரை இணையவழியில் மட்டுமே வகுப்புகள் நடைபெறும். ஆன்லைன் வகுப்பில் ஒருநாளைக்கு 5 பாடவேளைகள் மட்டுமே நடத்தப்பட வேண்டும். கல்விசார்ந்த இதரசெயல்பாடுகளை மாணவர்கள் மேற்கொள்ள மற்ற 3 பாடவேளைகளை வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x