Published : 09 Dec 2020 03:14 AM
Last Updated : 09 Dec 2020 03:14 AM

தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சிகாரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் சே.பாலச்சந்திரன் நேற்று வெளியிட்ட அறிக்கை:

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 9-ம் தேதி (இன்று) தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.சென்னை, புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானமழை பெய்யும்.

கடந்த 24 மணி நேரத்தில் திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் அதிகபட்சமாக 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

சென்னையில் 48% அதிக மழை

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 1-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை 37.92 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இது 56 சதவீதம்அதிகம். அதேபோல, சென்னையில் 101.6 செ.மீ. பெய்துள்ளது. இது 48 சதவீதம் அதிகம்.

அதேபோல், திருவண்ணாமலை மாவட்டத்தில் 42 சதவீதம்,விழுப்புரத்தில் 39, கள்ளக்குறிச்சியில் 38, புதுச்சேரி, சிவகங்கையில் 36, விருதுநகரில் 35 சதவீதம்கூடுதலாக மழை பதிவாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x