Published : 07 Dec 2020 03:14 AM
Last Updated : 07 Dec 2020 03:14 AM
தாம்பரம் விமானப்படை நிலையத்தில் பயிற்சி முடித்த வீரர்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு நடைபெற்றது.
சென்னையை அடுத்த தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப்படைபயிற்சி மையத்தில் 249 வீரர்கள் கடந்த 48 வாரங்களாக பயிற்சி பெற்று வந்தனர். இப்பயிற்சி நிறைவடைந்ததை அடுத்து, பயிற்சி நிறைவு அணிவகுப்பு நேற்றுமுன்தினம் விமானப்படை மையத்தில் நடைபெற்றது. இதில், விமானப்படை நிலையத்தின் தலைமை அதிகாரி ஏர் கமாடோர் விபுல் சிங், வீரர்களின் அணிவகுப்பை பார்வையிட்டு, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய விபுல் சிங்,“பயிற்சி முடித்து பணியில் சேரும் வீரர்கள் தங்கள் பணிக்காலத்தில் ஒழுக்கம், நெறியைக் கடைபிடித்து தங்கள் பதவியின் கவுரவத்தை காக்க வேண்டும்” என்றார்.
முன்னதாக, பயிற்சியின்போது அனைத்துப் பிரிவுகளிலும் சிறந்துவிளங்கியதற்கான ஆல்ரவுண்டர் கோப்பை அங்கிட் என்ற வீரருக்கு வழங்கப்பட்டது.
பாதுகாப்புத் துறை பத்திரிகை தகவல் அலுவலகம் இத்தகவலை தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT