Published : 03 Dec 2020 03:14 AM
Last Updated : 03 Dec 2020 03:14 AM

கரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோர் 94% ஆக உயர்வு

புதுடெல்லி: நாடு முழுவதும் நேற்று 36,604 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. அவர்களையும் சேர்த்து இதுவரை 94,99,413 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 89,32,647 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று 43,062 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தேசிய அளவில் கரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 94.03 சதவீதமாக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளில் 4,28,644 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 501 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,38,122 ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிராவில் புதிதாக 4,930 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அங்கு 90,168 பேர் சிகிச்சையில் உள்ளனர். கர்நாடகாவில் புதிதாக 1,330 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 23,728 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆந்திராவில் புதிதாக 685 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அங்கு 7,427 பேர் சிகிச்சையில் உள்ளனர். கேரளாவில் நேற்று 6,316 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அங்கு 61,455 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். டெல்லியில் புதிதாக 4,006 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 31,769 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x