Published : 28 Nov 2020 03:16 AM
Last Updated : 28 Nov 2020 03:16 AM
ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் ரஜவுரி மாவட்டம், சுந்தர்பாணி பகுதியில் உள்ள எல்லையில் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாகிஸ்தான் படையினர் நேற்று தாக்குதல் நடத்தினர். இதில் பிரேம் பகதூர் காத்ரி, சுக்பீர் சிங் என்ற இரு இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
ஜம்மு காஷ்மீரில் சர்வதேச எல்லை மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இந்திய ராணுவ நிலைகள் மற்றும் கிராமங்களை குறிவைத்து பாகிஸ்தான் படையினர் தாக்குதல் நடத்துவது அண்மைக் காலமாக அதிகரித்துள்ளது. இதற்கு இந்திய ராணுவம் உரிய பதிலடி கொடுத்து வருகிறது. எனினும், காஷ்மீரில் பாகிஸ்தான் படையினரின் தாக்குதலுக்கு நேற்று முன்தினம் ராணுவ அதிகாரி ஒருவரும் கடந்த சனிக்கிழமை ராணுவ வீரர் ஒருவரும் உயிரிழந்தனர்.
சர்வதேச எல்லை மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் கடந்த 2019-ம் ஆண்டில் 3,168 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி வரை மட்டும் 3,589 முறை தாக்குதல் நடத்தியுள்ளதாக அதிகார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT