Published : 27 Nov 2020 07:21 AM
Last Updated : 27 Nov 2020 07:21 AM
பரமக்குடி: பரமக்குடியில் தனியார் பேருந்து மோதியதில் திருச்சியைச் சேர்ந்த பள்ளிச் சிறுவன் உயிரிழந்தார்.
திருச்சியில் வசித்து வருபவர்கள் ரமேஷ்கண்ணன், பாக்கியலட்சுமி தம்பதி. இவர்களது மகன் முகிலன்(14), திருச்சியில் உள்ள பள்ளி ஒன்றில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். ரமேஷ்கண்ணன் குடும்பத்தினர் தீபாவளி பண்டிகைக்காக பரமக்குடி மணி நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்துள்ளனர். நேற்று முகிலன் அதே பகுதியில் உள்ள கடையில் பொருட்கள் வாங்க சைக்கிளில் சென்றுள்ளார். சாலையைக் கடக்க முயன்றபோது, மதுரையில் இருந்து பரமக்குடிக்குச் சென்ற தனியார் பேருந்து முகிலன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த முகிலன் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து பரமக்குடி நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT