Published : 26 Nov 2020 03:17 AM
Last Updated : 26 Nov 2020 03:17 AM
ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் 147 தமிழக படகுகள் பாதுகாப்பாக நிறுத்துவதை உறுதி செய்ய அதிகாரிகள் குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மீன்வளத் துறை மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் புயல் எச்சரிக்கை உள்ள மாவட்டங்களில் அனைத்து விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் கரைக்கு கொண்டு வரப்பட்டு பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்த 147 தமிழக விசைப்படகுகள் ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபட்டினம் மீன்பிடி துறைமுகங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கிருஷ்ணாபட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் தமிழக படகுகள் பாதுகாப்பாக நிறுத்தப்படுவதை உறுதி செய்ய மீன்துறை உதவி இயக்குநர் தலைமையிலான குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் 4,195 விசைப்படகுகளும், 26,467 நாட்டுப்படகுகளும் பாதுகாப்பாக கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
புயல் எச்சரிக்கையுள்ள அனைத்து மாவட்ட மீனவ கிராமங்களிலும் மீன்வளத் துறை அலுவலர்கள் முகாமிட்டு புயல் நிலையை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT