Published : 25 Nov 2020 03:14 AM
Last Updated : 25 Nov 2020 03:14 AM
புதுடெல்லி: நாடு முழுவதும் நேற்று 37,975 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. 6 நாட்களுக்குப் பிறகு தினசரி தொற்று மீண்டும் 40,000-க்கு கீழ் குறைந்திருக்கிறது. இதுவரை 91,77,840 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 86,04,955 பேர் குணமடைந்துள்ளனர். தேசிய அளவில் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 93.76 சதவீதமாக உயர்ந்துள்ளது. நேற்று 42,314 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
மருத்துவமனைகளில் 4,38,667 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 480 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,34,218 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் புதிதாக 4,153 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 82,915 பேர் சிகிச்சையில் உள்ளனர். கர்நாடகாவில் புதிதாக 1,509 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 24,727 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆந்திராவில் புதிதாக 545 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அந்த மாநிலத்தில் 13,394 பேர் சிகிச்சையில் உள்ளனர். கேரளாவில் நேற்று 5,420 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. மாநிலத்தில் 64,412 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT