Published : 24 Nov 2020 03:13 AM
Last Updated : 24 Nov 2020 03:13 AM

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 4.43 லட்சம் பேருக்கு சிகிச்சை

புதுடெல்லி: நாடு முழுவதும் நேற்று 44,059 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதன்மூலம் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 91,39,865 ஆக உயர்ந்துள்ளது. இதில் 85,62,641 பேர் குணமடைந்துள்ளனர். மருத்துவமனைகளில் 4,43,486 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 511 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,33,738 ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிராவில் புதிதாக 5,753 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 82,521 பேர் சிகிச்சையில் உள்ளனர். கர்நாடகாவில் புதிதாக 1,704 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 24,887 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆந்திராவில் புதிதாக 1,121 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அந்த மாநிலத்தில் 14,249 பேர் சிகிச்சையில் உள்ளனர். கேரளாவில் நேற்று 3,757 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்த மாநிலத்தில் 64,166 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அடிப்படையில் தலைநகர் டெல்லி 7-வது இடத்தில் இருந்தது. கடந்த சில வாரங்களாக டெல்லியில் வைரஸ் பரவல் அதிகமாக உள்ளது. இதன்காரணமாக டெல்லி நேற்று 6-வது இடத்துக்கு சென்றுள்ளது. டெல்லியில் புதிதாக 6,746 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அங்கு 40,212 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x