Published : 24 Nov 2020 03:15 AM
Last Updated : 24 Nov 2020 03:15 AM
அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகேயுள்ள இலையூர் கோரியம்பட்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(51). விவசாயி. இவர் தன் மனைவி ராஜவள்ளி(47), மகன்கள் கபிலன்(19), தமிழன்(16) ஆகியோருடன் நேற்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது அவர் மனைவி மகன்களுடன் தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த போலீஸார் அவர்களை மீட்டு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
விசாரணையில், பாகப்பிரிவினையின்போது, தனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை, தனது தம்பி மனைவி செந்தமிழ்செல்வி உரிமை கொண்டாடி, அந்த இந்த இடத்தை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்காமல் தகராறு செய்வதால் தீக்குளிக்க முயன்றதாக போலீஸாரிடம் கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறி போலீஸார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT