Published : 22 Nov 2020 03:15 AM
Last Updated : 22 Nov 2020 03:15 AM
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் தொழுதலாங்குடியில் உள்ள கீழ சர்வமானிய தெருவில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், குடியிருப்புக்கு அருகே உள்ள தனியார் காஸ் கிடங்குக்கு சிலிண்டர் ஏற்றுவதற்காக வந்துசெல்லும் லாரிகளால், இங்குள்ள 500 மீட்டர் தொலைவுள்ள கிராமப்புற சாலை சேதமடைந்து, குண்டும் குழியுமாக காணப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக இதே நிலை நீடிப்பதால் விரக்தியடைந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று கீழ சர்வமானிய தெரு சாலையில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த குத்தாலம் போலீஸார், அவர்களை சமாதானப்படுத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT