Published : 22 Nov 2020 03:16 AM
Last Updated : 22 Nov 2020 03:16 AM
1957-ல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில், காங்கிரஸ் கட்சி சார்பில் குளச்சல் தொகுதியில் மணக்குடியைச் சேர்ந்த லூர்தம்மாள் சைமன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அன்றைய முதல்வர் காமராஜரின் அமைச்சரவையில் மீன்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற இவர் மீனவர் கூட்டுறவு சங்கங்களை உருவாக்க அடிகோலினார்.
மீனவ சமுதாய மக்களின் வளர்ச்சிக்காக பாடுபட்ட லூர்தம்மாள் சைமனுக்கு முழு உருவ வெண்கலச் சிலை அமைக்க குளச்சலைச் சேர்ந்த விசைப்படகு சங்கத்தினர் முடிவெடுத்துள்ளனர்.
சிலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா உலக மீனவர் தினமான நேற்று குளச்சல் மரமடி சந்திப்பில் நடைபெற்றது.
கோட்டாறு மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை வகித்து அர்ச்சிப்பு செய்தார். எம்எல்ஏக்கள் பிரின்ஸ், சுரேஷ்ராஜன், ஆஸ்டின், ராஜேஷ்குமார், மனோதங்கராஜ், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் விஜய் வசந்த் மற்றும் லூர்தம்மாள் சைமனின் குடும்பத்தினர், திரளான மீனவர்கள் கலந்து கொண்டனர். மீனவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றிய லூர்தம்மாள் சைமனுக்கு சிலை அமைப்பதில் பெருமிதம் கொள்வதாக நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் பேசினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT