Published : 21 Nov 2020 03:17 AM
Last Updated : 21 Nov 2020 03:17 AM

கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து 568 கனஅடியாக சரிவு

கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 568 கனஅடியாக சரிந்துள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்துள்ளதால், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 648 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை விநாடிக்கு 568 கனஅடியாக குறைந்தது. அணையின் மொத்த கொள்ளளவான 44.28 அடியில் 40.02 அடிக்கு தண்ணீர் உள்ளதால், அணையில் இருந்து பாசன கால்வாய்கள் மற்றும் ஆற்றில் 568 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி அணையை பொறுத்தவரை கடந்த 3 நாட்களாக அணைக்கு நீர்வரத்து 551 கனஅடியாக நீடித்து வருகிறது. அணையில் மொத்த உயரமான 52 அடியில் 50 அடிக்கு தண்ணீர் உள்ளது. அணையிலிருந்து விநாடிக்கு 551 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x