Published : 20 Nov 2020 03:14 AM
Last Updated : 20 Nov 2020 03:14 AM

குடிசைமாற்று வாரிய பணிகளை விரைந்து முடிக்க துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவுறுத்தல்

சென்னை

குடிசை மாற்று வாரியத்தின் கீழ் நடைபெறும் திட்டப்பணிகளை குறித்த காலக்கெடுவுக்குள் முடிக்க அதிகாரிகளுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவுறுத்தினார்.

தமிழ்நாடு குடிசைமாற்று வாரிய பணிகள் குறித்து அதிகாரிகளுடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று ஆலோசனை நடத்தினார்.

இதில், அனைவருக்கும் வீட்டுவசதி திட்டம், பயனாளிகள் தாங்க ளாகவே மேற்கொள்ளும் கட்டுமானம் (தனி வீடுகள்) மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டம், உலக வங்கி நிதி உதவியுடன் தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் உறைவிட மேம்பாட்டு திட்டம், ஆசிய வளர்ச்சி வங்கியின் உதவியுடன் நகர்ப்புற ஏழை எளியவர்களுக்கான பேரிடர்களை எதிர்கொள்ளும் நிலைக்கத்தக்க வீட்டு வசதி திட்டம் ஆகிய திட்டங்களின் முன்னேற்றங்கள் குறித்து துணை முதல்வர் ஆய்வு செய்து, அனைத்து திட்டப்பணிகளையும் குறித்த காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டு்ம் என்று அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் வீட்டுவசதித் துறை செயலர் ராஜேஷ் லக்கானி, குடிசைமாற்று வாரிய மேலாண் இயக்குநர் கிர்லோஷ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x