Published : 20 Nov 2020 03:14 AM
Last Updated : 20 Nov 2020 03:14 AM
கிரிக்கெட் மைதான விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்கும் முன்பே, அதிகாரிகளை வைத்து மிரட்டி, மின்சாரத்தை தடை செய்வதும், கட்டிடத்தை இடிக்க உத்தரவிடுவதும் ஏன்? இப்படி உத்தரவிட ஆளுநருக்கு யார் அதிகாரம் தந்தது? என்று முதல்வர் நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுச்சேரி துத்திப்பட்டு கிராமத்தில் தனியார் நிறுவனம் ஒன்று அப்பகுதியில் அரசு நிலம் மற்றும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கிரிக்கெட் மைதானம் அமைத்துள்ளதாக புகார் எழுந்தது. அதன் மீதுநடவடிக்கை எடுக்க துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அதிகாரிக ளுக்கு உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து அரசுத் துறைகள் நட வடிக்கை எடுத்து வருகின்றன.
இந்நிலையில் உள்ளூர் வளர்ச்சியை தடுப்பதாகக் கூறி, ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து காங்கி ரஸ் எம்எல்ஏ தீப்பாய்ந்தான் அண்மையில் மறியல் போராட்டம் நடத்தினார். அதே நேரத்தில் ஆளுநர் கிரண்பேடிக்கு நன்றி தெரிவித்து துத்திப்பட்டு கிராமமக்கள் என்ற பெயரில் போஸ்டர்க ளும் ஒட்டப்பட்டுள்ளன.
யார் அதிகாரம் தந்தது?
தலைமைச் செயலர் விசாரணை
துணைநிலை ஆளுநர் கிரண் பேடி ஸ்டேடிய விவகாரம் தொடர் பாக வாட்ஸ்அப்பில் தெரிவித்துள்ள விவரத்தில், “எங்களுக்கு விளை யாட்டு வேண்டும். ஆனால் நெறிமுறையற்ற வழிகளில் அது இருக்கக்கூடாது. அனைத்து வழிகளி லும் ஏமாற்றி செயல்படக் கூடாது.எவ்வளவு உயரத்தில் யார் இருந்தாலும் சட்டம் அனைவருக்கும் மேலானது, பொதுவானது. முக்கிய மாக நகரத் திட்டக் குழுமத்திடம் எவ்வித அனுமதியின்றி மைதானத்தில் கட்டுமானப் பணிகளைமேற்கொண்டது தொடர்பாக தலை மைச் செயலர் அஸ்வனிகுமார் விரிவான விசாரணையில் ஈடு பட்டுள்ளார். இவ்விவரங்கள் அனைத்தும் பிசிசிஐ-க்கு தெரி விக்கப்பட்டுள்ளது” என்று குறிப் பிட்டுள்ளார்.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT