Published : 20 Nov 2020 03:15 AM
Last Updated : 20 Nov 2020 03:15 AM

மனைவி, மகனை தாக்கிய வழக்கில் தந்தை உட்பட 3 பேருக்கு 5 ஆண்டு சிறை

நாமக்கல்: நாமக்கல் அருகே உள்ள புதுச்சத்திரம் கல்யாணி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிவேல் (55). இவரது மனைவி பர்வதம் (50). மகன் மோகன்குமார் (21). கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இச்சூழலில் கடந்த 2017-ம் ஆண்டு பழனிவேல் தந்தை இளையப்ப கவுண்டருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவரைக் காண பர்வதம், மோகன்குமார் சென்றுள்ளனர்.

அப்போது ஏற்பட்ட தகராறில் பர்வதம், அவரது மகன் மோகன்குமார் தாக்கப்பட்டனர். இது தொடர்பாக பழனிவேல் மற்றும் அவரது உறவினர்கள் பூபதி, ரத்தினவேல், ராமசாமி ஆகிய 4 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

இந்த வழக்கு நாமக்கல் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நேற்று முன்தினம் தீர்ப்பளிக்கப்பட்டது. இதன்படி பழனிவேல், ராமசாமி, ரத்தினவேல் ஆகிய 3 பேருக்கும் தலா 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் தலா ரூ.2,500 அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கில் கைதான பூபதி வழக்கு விசாரணையின்போது இறந்துவிட்டார், என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x