Published : 20 Nov 2020 03:15 AM
Last Updated : 20 Nov 2020 03:15 AM

ரூ.34 லட்சத்தில் புதிய வகுப்பறைக் கட்டிடம்

கரூர்: கரூர் மக்களவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் கரூர் மாவட்டம் ஆத்தூர் பூலாம்பாளையம் ஊராட்சி நத்தமேட்டில் ரூ.7 லட்சத்தில் சமுதாயக்கூடம் அமைக்கவும், கரூர் அரசு கலைக் கல்லூரியில் ரூ.34 லட்சத்தில் முதல் தளத்துடன் கூடிய வகுப்பறைகள் கட்டுவதற்காகவும் நேற்று பூமி பூஜை நடைபெற்றது.

இதில், கரூர் மக்களவை உறுப்பினர் செ.ஜோதிமணி, அரவக்குறிச்சி எம்எல்ஏவும் கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளருமான வி.செந்தில்பாலாஜி ஆகியோர் பங்கேற்றனர். அரசு கலைக்கல்லூரி முதல்வர் கவுசல்யாதேவி, பேராசிரியர்கள் ராதாகிருஷ்ணன், ராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x