Published : 20 Nov 2020 03:15 AM
Last Updated : 20 Nov 2020 03:15 AM

காவல்துறையினர் கொடி அணிவகுப்பு

திருச்சி

திருச்சி மாநகர காவல்துறை சார்பில் பொதுமக்கள் – காவல் துறை இடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில், தென்னூர் மகாத்மா காந்தி பள்ளி சந்திப்பிலிருந்து தொடங்கிய கொடி அணிவகுப்புக்கு மாநகர துணை ஆணையர் அ.பவன்குமார் ரெட்டி தலைமை வகித்தார்.

இந்த பேரணி சாலை ரோடு, கரூர் புறவழிச்சாலை வழியாகச் சென்று அண்ணாமலை நகரில் நிறைவடைந்தது.

இதேபோன்று திருவானைக் காவல் நான்கு கால் மண்டபத்தி லிருந்து தொடங்கிய கொடி அணிவகுப்புக்கு மாநகர துணை ஆணையர் (போக்கு வரத்து) இரா.வேதரத்தினம் தலைமை வகித்தார். இந்த பேரணி ஒற்றைத் தெரு, நடுகொண்டையம்பேட்டை, சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாகச் சென்று இரணியம் மன்கோயில் அருகே நிறை வடைந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x