Published : 18 Nov 2020 03:13 AM
Last Updated : 18 Nov 2020 03:13 AM

கர்நாடகாவில் மராட்டியர் வளர்ச்சி ஆணையம் கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் வாழும் மராட்டியர்களின் நலனுக்காக தனியாக‌ வளர்ச்சி ஆணையம் தொடங்கி, ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள‌து.

இதுகுறித்து கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறுகையில், '' கர்நாடகாவில் பெல்காம், பீஜாப்பூர், குல்பர்கா, பீதர் உள்ளிட்ட மாவட்டங்களில் லட்சக்கணக்கான மராட்டியர்கள் ‌நீண்ட காலமாக வாழ்கின்றனர். அவர்களின் கல்வி, பொருளாதாரம், சமூக மேம்பாட்டுக்காக 'மராட்டியர் வளர்ச்சி ஆணையம்' என அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரி வருகின்றனர். அதனை ஏற்று 'மராட்டியர் வளர்ச்சி ஆணையம்' உருவாக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சகத்தின் ஒப்புதலோடு இந்த ஆணையத்துக்கு ரூ. 50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது'' என தெரிவித்துள்ளார்.இதை ஏகி கரண், சகலா மராத்தா சமாஜ் உள்ளிட்ட ம‌ராட்டிய அமைப்புகள் வரவேற்றுள்ளன. கர்நாடகாவில் மராட்டியர் வளர்ச்சி ஆணையத்துக்கு பல கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x