Published : 13 Nov 2020 03:16 AM
Last Updated : 13 Nov 2020 03:16 AM
புதுடெல்லி: உத்தராகண்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங் ஜீனா சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
உத்தராகண்டில் திரிவேந்திர சிங் ராவத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு அல்மோரா மாவட்டம், சால்ட் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனவர் சுரேந்திர சிங் ஜீனா (50). அவருக்கு கடந்த வாரம் கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலை மரணம் அடைந்தார். உத்தராகாண்டில் 2012-ம் ஆண்டு முதல் மூன்று முறை தொடர்ச்சியாக சட்டப்பேரவைத் தேர்தலில் எம்.எல்.ஏ.வானவர் சுரேந்திர சிங். கடந்த வாரம் அவரது மனைவி மாரடைப்பால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுரேந்திர சிங் ஜீனா மறைவுக்கு முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் மற்றும் பாஜக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். சுரேந்திர சிங் மறைவு காரணமாக உத்தராகண்டில் தீபாவளி கொண்டாட்டங்களை பாஜக ரத்து செய்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT