Published : 12 Nov 2020 03:14 AM
Last Updated : 12 Nov 2020 03:14 AM
மேற்குவங்கத்தில் கரோனா பரவலை தடுக்க தீபாவளி நாளில் பட்டாசு வெடிக்கவும் விற்பனை செய்யவும் கொல்கத்தா உயர் நீதிமன்றம் தடை விதித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து கவுதம் ராய், புர்ரா பஜார் பட்டாசு விற்பனையாளர்கள் சங்கம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட் மற்றும் இந்திரா பானர்ஜி ஆகியோர் கொண்ட அமர்வு உயர் நீதிமன்ற முடிவில் தலையிட மறுத்து மனுவை தள்ளுபடி செய்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
நோய்த் தொற்றுக்கு மத்தியில் இன்று மக்கள் வாழ்க்கையே அழிவின் விளிம்பில் உள்ளது. கரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் உயிரைப் பாதுகாப்பது மிகவும்முக்கியமானது. இந்தச் சூழ்நிலையில் நாம் அனைவரும் உயிருக்குப் போராடுகிறோம். நமது வீடுகளில் வயதானவர்கள் உள்ளனர். அவர்களின் உயிரைப் பாதுகாப்பது மிகவும் முக்கியமானது.பண்டிகைகள் முக்கியமானவை தான். ஆனால், பண்டிகைகளை விட வாழ்க்கை மிகவும் முக்கி யமானது. மேலும், கள நிலவரம் நன்கு அறிந்த கொல்கத்தா நீதி மன்றத்துக்கு மக்களுக்கு என்ன தேவை என்பது தெரியும்.
இவ்வாறு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT