Published : 11 Nov 2020 03:17 AM
Last Updated : 11 Nov 2020 03:17 AM
சித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
கரோனாவை தடுக்க மருந்து கண்டுபிடித்துள்ளதாகவும், ஆனால் அதை தமிழக அரசு புறக்கணிப்பதாகவும் கூறி, பாரம்பரிய சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் சமூக ஊடகங்களில் வீடியோ வெளியிட்டார். இதையடுத்து அவர் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டு குண்டர்சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். இதை எதிர்த்து அவரது தந்தைகலியபெருமாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி அமர்வில் இந்த வழக்கு விசாரணை நடந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கே.பாலு ஆஜராகி வாதிட்டார்.
இந்நிலையில், பாரம்பரிய சித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நீதிபதிகள் நேற்று ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT