Published : 10 Nov 2020 03:11 AM
Last Updated : 10 Nov 2020 03:11 AM
மும்பை: மும்பையில் கட்டிட உள் வடிவமைப்பாளர் ஒருவர் கடந்த 2018-ல் தனது தாயுடன் தற்கொலை செய்துகொண்டார்.
இது தொடர்பாக தற்கொலைக்குத் தூண்டியதாக ரிபப்ளிக் டிவி எடிட்டர் அர்னாப் கோஸ்வாமி, பெரோஷ் ஷேக், நிதிஷ் சர்தா ஆகிய மூவரை மும்பை போலீஸார் கடந்த 4-ம் தேதி கைது செய்தனர். மூவரையும் வரும் 18-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க அலிபாக் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அலிபாக் சிறைக்கான கோவிட்-19 மையமாக அறிவிக்கப்பட்டுள்ள பள்ளி ஒன்றில் அர்னாப் தங்க வைக்கப்பட்டார். இந்நிலையில் அவர் செல்போன் பயன்படுத்தியது தெரியவந்ததால் நேற்று முன்தினம் தலேஜா சிறைக்கு மாற்றப்பட்டார். இதனிடையே அர்னாப் உள்ளிட்ட மூவரும் தங்களுக்கு இடைக்கால ஜாமீன் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் கடந்த சனிக்கிழமை மனு தாக்கல் செய்தனர். அவர்களது மனு உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுக்களை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். அதேநேரம் அர்னாப் உள்ளிட்ட மூவரின் ஜாமீன் மனு மீது செஷன்ஸ் நீதிமன்றம் 4 நாட்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT