Published : 09 Nov 2020 03:11 AM
Last Updated : 09 Nov 2020 03:11 AM
வடக்கு காஷ்மீர் குப்வாரா மாவட்டம், மச்சில் செக்டார் பகுதியில் பிஎஸ்எப் வீரர்கள் நேற்று முன்தினம் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் நள்ளிரவு 1 மணிஅளவில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் சந்தேகத்துக்கிடமாக ஆட்கள் நடமாட்டத்தைக் கண்டனர். அவர்களை எச்சரிக்கும் வகையில் பிஎஸ்எப் வீரர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு எதிர்தரப்பில் இருந்து பதில் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதையடுத்து இரு தரப்பிலும் மோதல் ஏற்பட்டது. சுமார் 3 மணி நேரம் நீடித்த இந்த மோதலில் சுதீப் சர்க்கார் என்ற கான்ஸ்டபிள் வீரமரணம் அடைந்தார். தீவிரவாதிகளில் ஒருவர் கொல்லப்பட்டார். அப்பகுதியில் இருந்து ஓர் ஏ.கே. ரக துப்பாக்கி மற்றும் 2 பைகள் கைப்பற்றப்பட்டன.
இதனிடையே பிஎஸ்எப் வீரர்களுக்கு உதவிடும் வகையில் சம்பவ இடத்துக்கு ராணுவ வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். அதிகாலை 4 மணிக்கு மோதல் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, தப்பிடியோடிய தீவிரவாதிகள் தேடும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நேற்று காலை 10.20 மணிக்கு எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு முன் சுமார்ஒன்றரை கி.மீ. தொலைவில்தீவிரவாதிகள் கண்டறியப்பட்ட னர். இதையடுத்து தீவிரவாதி களுடன் மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதில் மேலும் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். எனினும் இந்திய ராணுவம் தரப்பில்1 அதிகாரியும் 2 வீரர்களும் வீரமரணம் அடைந்தனர். மேலும் 2 வீரர்கள் காயம் அடைந்தனர். இவர்கள் உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT