Published : 09 Nov 2020 03:11 AM
Last Updated : 09 Nov 2020 03:11 AM

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரம் காங்கிரஸ் நிலைப்பாடு கூட்டணியை பாதிக்காது தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உறுதி

சென்னை

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

பண மதிப்பு நீக்க நடவடிக்கையை பிரதமர் மோடி அறிவித்து இன்றுடன் (நேற்று) 4 ஆண்டு நிறைவு பெறுகிறது. பணமதிப்பு நீக்கத்தால் மோடி அரசு கூறியதுபோல கறுப்புப் பணமும் ஒழியவில்லை. தீவிரவாதமும் ஒழியவில்லை.

ஜனநாயகம், மதச்சார்பின்மை என்ற கொள்கையில் உறுதியுள்ள கட்சிகள் திமுக கூட்டணியில் உள்ளன. இக்கூட்டணியில் கருத்து சொல்லும் சுதந்திரம் உள்ளது. 7 பேர் விடுதலையில் காங்கிரஸின் கருத்தால் திமுக கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை.

ஆயிரக்கணக்கான தமிழர்கள் பல ஆண்டுகளாக சிறையில் உள்ள நிலையில், இந்த 7 பேரை மட்டும் தமிழர்கள் மட்டும் என்று அழைத்து சலுகை கேட்பது ஏன் என்பது தெரியவில்லை. அந்த 7 பேரையும் நீதிமன்றம் விடுவித்தால் நானே சென்று வரவேற்பேன். ஆனால், அதற்காக அரசியல் அழுத்தம்கொடுப்பதையே எதிர்க்கிறோம்.

மக்களை பாதிக்கும் பிரச்சினைகளில் இருந்து திசை திருப்புவதற்காக பாஜக வேல் யாத்திரை நடத்துகிறது. எந்த யாத்திரை நடத்தினாலும் தமிழகத்தில் பாஜக வளராது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x