Published : 09 Nov 2020 03:11 AM
Last Updated : 09 Nov 2020 03:11 AM

பி.ஆர்க். பொது கலந்தாய்வு இன்று தொடக்கம்

சென்னை

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கட்டிடவியல் கல்லூரிகளில் பி.ஆர்க். படிப்பில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. தமிழகத்தில் 51 கட்டிடவியல் கல்லூரிகளில் இளநிலை கட்டிட அமைப்பியல் (பி.ஆர்க்) படிப்புக்கு 1,800-க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன.

இதற்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்தனர். அதில், தகுதி பெற்ற 1,996மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் கடந்த 6-ம் தேதி வெளியிடப்பட்டது. சிறப்பு பிரிவுக்கான கலந்தாய்வு நேற்று நடைபெற்றது. அதில், விளையாட்டு பிரிவில் 6 மாணவர்களும், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுபிரிவில் ஒரு மாணவரும் கல்லூரியைத் தேர்வு செய்துள்ளனர்.

இந்நிலையில், பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு இன்று (நவ.9-ம் தேதி) தொடங்குகிறது. இதில் கலந்துகொள்ள 1,940 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x