Published : 09 Nov 2020 03:11 AM
Last Updated : 09 Nov 2020 03:11 AM

2 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்

சென்னை

சென்னை வானிலை ஆய்வு மையஇயக்குநர் நா.புவியரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகப் பகுதியில், காற்று வீசும் திசையில் வேக மாறுபாடு ஏற்பட்டுள்ளது. கிழக்கு திசைக் காற்றில் சுழற்சியும் நிலவி வருகிறது. இருப்பினும் தமிழகத்தில் நவ.9, 10 ஆகிய தேதிகளில் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக் கூடும்.

கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

8-ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக சென்னை டிஜிபி அலுவலகத்தில் 10 செமீ, அண்ணா பல்கலைக்கழகம், சோழிங்கநல்லூர், திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, கடலூர் மாவட்டம் சிதம்பரம் ஆகிய இடங்களில் தலா 5 செமீ மழை பதிவாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x