Published : 31 Oct 2020 03:13 AM
Last Updated : 31 Oct 2020 03:13 AM
சிறந்த நிர்வாகம் கொண்ட மாநிலங்கள் வரிசையில் தமிழகத்துக்கு 2-வது இடம் கிடைத்துள்ளது. முன்னாள் இஸ்ரோ தலைவர் டாக்டர் கே.கஸ்தூரிரங்கன் தலைமையிலான அரசுசாரா அமைப் பின் அறிக்கையில் இவ்வாறு தெரி விக்கப்பட்டுள்ளது. இந்த தரவரிசைப் பட்டியலில் கேரளா முதலிடத்தைப் பெற்றுள்ளது. உத்தரப்பிரதேசம், பிஹார் கடைசி இடத்தை பிடித்தன.
கே.கஸ்தூரிரங்கன் தலைமையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவைத் தலைமையகமாக கொண்டு, ‘பப்ளிக் அஃபேர்ஸ் சென்டர்’ (பிஏசி) என்ற அரசுசாரா அமைப்பு செயல்பட்டு வருகிறது. சிறந்த ஆட்சி, நிர்வாகத்தைத் தரும் மாநிலங்கள் குறித்து பிஏசி அமைப்பு ஆய்வு செய்து நேற்று தனது ஆண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள தாவது: சிறந்த ஆட்சி நிர்வாகத்தைத் தரும் பெரிய மாநிலங்களில் அதிக புள்ளிகளைப் பெற்று கேரளா முதலிடம் பெற்றுள்ளது. இந்த வரிசையில் 2-வது இடத்தை தமிழகம் பெற்றுள்ளது. 3-வது இடத்தை ஆந்திராவும், 4-வது இடத்தை கர்நாடகாவும் பிடித்துள்ளன. உத்தர பிரதேசம், ஒடிசா, பிஹார் ஆகிய மாநிலங்கள் இந்த தரவரிசைப் பட்டியலில் கடைசி இடத்தைப் பெற்றுள்ளன.
சிறிய மாநிலங்கள் தரவரிசையில் கோவா முதலிடத்தைப் பிடித்துள்ளது. 2-வது இடத்தை மேகாலயாவும், 3-வது இடத்தை இமாச்சல பிரதேசமும் பெற் றுள்ளன. இந்த வரிசையில் மணிப்பூர், டெல்லி, உத்தராகண்ட் ஆகிய மாநிலங் கள் கடைசி இடங்களைப் பிடித்துள்ளன.
யூனியன் பிரதேசங்கள் தரவரிசையில் சண்டிகர் முதலிடத்தைத் தட்டிச் சென்றுள் ளது. புதுச்சேரி 2-வது இடத்தையும் லட்சத் தீவுகள் 3-வது இடத்தையும் பிடித்துள்ளன. தாதர் நாகர் ஹவேலி, அந்தமான் தீவுகள், ஜம்மு காஷ்மீர், நிக்கோபார் ஆகியவை கடைசி இடங்களைப் பெற்றுள்ளன.
இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.
ஒவ்வொரு பெரிய மாநிலம், சிறிய மாநிலம், யூனியன் பிரதேசங்கள் எவ் வாறு சிறந்த முறையில் ஆளப்படுகின்றன என்பது தொடர்பாக பல்வேறு துறைகளில் பிஏசி சார்பில் ஆய்வு செய்யப்பட்டு அறிக்கையாக வெளியிடப் பட்டுள்ளது.- பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT