Published : 30 Oct 2020 03:12 AM
Last Updated : 30 Oct 2020 03:12 AM

தென் தமிழகத்தில்2 நாட்களுக்குகன மழை பெய்யும்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழக மாவட்டங்களில் அடுத்த 2 நாட் களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக செய்தி யாளர்களிடம் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண் டல தலைவர் எஸ்.பாலச்சந்திரன் நேற்று கூறியதாவது:

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், சென்னை உள்ளிட்ட வட கட லோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், ஒருசில இடங்களில் கனமழை யும் பெய்துள்ளது. வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழக மாவட்டங்களில் 2 நாட்களுக்கு (அக்.30, 31) ஒருசில இடங் களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், இதர இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். வட கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் அதிகபட்சம்

29-ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை டிஜிபி அலுவலகம் பகுதியில் 18 செ.மீ. மழை பெய்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் 14, நுங்கம்பாக்கம், புழலில் தலா 13, தூத்துக்குடி மாவட்டம் சூரன்குடியில் 11, தூத்துக்குடி மாவட்டம் வைப்பார் மற்றும் ராமேசுவரத்தில் தலா 10, சென்னை அம்பத்தூர், ராம நாதபுரம் மாவட்டம் பாம்பனில் தலா 9, சென்னை ஆலந்தூர், சோழிங்கநல்லூரில் தலா 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னையில் நேற்று முன் தினம் நள்ளிரவு தொடங்கி விடிய விடிய கொட்டித் தீர்த்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி யது. பல இடங்களில் வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாயினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x