Published : 15 May 2014 03:40 PM
Last Updated : 15 May 2014 03:40 PM

திருடு போகும் தகவல்கள்

சைபர் உலகில் தகவல்கள் திருடு போவது அடிக்கடி நடக்கும் விஷயம்தான். ஆனால் இந்த ஆண்டு தொடக்கத்திலேயே மில்லியன் கணக்கில் தகவல்கள் களவு போயிருக்கிறதாம். கடந்த ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையில் மட்டும் உலகம் முழுவதும் 200 மில்லியன் தகவல்கள் திருடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இப்படி தகவல்களை பறிகொடுக்கும் நாடுகளில் தென் கொரியா முதல் இடத்தில் உள்ளது. தென் கொரியாவில் கடந்த 4 மாதங்களில் மட்டும் 1.58 மில்லியன் தகவல்கள் திருடப்பட்டுள்ளன. தகவல்கள் திருடப்படுவது கடந்த ஆண்டை விட 233 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x