

சமூக வலைத்தளங்களில் ஏதேனும் நிறுவனத்தின் பெயரில் பரிசு என்று போட்டிருந்தால் போதும். அங்கு சென்று, கேட்கப்படும் விவரங்களை எல்லாம் பூர்த்தி செய்து, எத்தனை பேருக்கு ஃபார்வேர்டு செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறதோ, அத்தனை பேருக்கும் ஃபார்வேர்டு செய்துவிட்டு, பரிசுக்கான தகவலை எதிர்பார்ப்பதில் நம்மவர்களை அடித்துக்கொள்ளவே முடியாது! நம்ப முடியாத அளவுக்குப் பரிசு என்று அறிவித்தாலும்கூட, அதையும் உண்மை என்று நம்பி, கேட்கும் விவரங்களைத் தரும் அளவுக்கு வெகுளியாகவோ பேராசைக்காரர்களாகவோ இருப்பவர்கள் அநேகம்.
அப்படித்தான் இரண்டு மாதங்களுக்கு முன்பு செங்கல்பட்டைச் சேர்ந்த கெளதமின் சமூக வலைதளப் பக்கத்தில் பிரபலமான தொலைத்தொடர்பு நிறுவனத்தின் பெயரில் ஆஃபர் அறிவிக்கப்பட்டிருந்தது. அதைப் பார்த்த கெளதம், அது உண்மையென நம்பினார்.