மதுரையில் யூடியூபர் மாரிதாஸ் கைது: அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்

மதுரையில் கைது செய்யப்பட்ட மாரிதாஸ்

மதுரையில் கைது செய்யப்பட்ட மாரிதாஸ்

Updated on
1 min read

சென்னை: தமிழக தொழில்​துறை அமைச்​சர் கீர்த்​தனா குறித்து சமூக வலை​தளங்​களில் அவதூறு பரப்​பிய​தாக, பிரபல யூடியூபர் மாரி​தாஸை சென்னை சைபர் க்ரைம் போலீ​ஸார் மதுரை​யில் கைது செய்​தனர்.

பிரபல யூ டியூப்​பர் மாரி​தாஸ். இவர், அவ்​வப்​போது அரசி​யல் தொடர்​பான கருத்​து​களை பதி​விடு​வதை வழக்​க​மாக கொண்​டுள்​ளார். கடந்த திமுக ஆட்​சி​யில் அரசுக்கு எதி​ராக சில பதிவு​களை வெளி​யிட்​டது தொடர்​பாக போலீ​ஸார் அவரை கைது செய்​தனர். தற்​போது, தமிழகத்​தில் ஆட்சி மாற்​றம் ஏற்​பட்டு விஜய் தலை​மையி​லான அரசு நடை​பெற்று வரு​கிறது.

இந்​நிலை​யில், அரசு மற்​றும் அமைச்​சர்​களின் செயல்​கள் குறித்து விமர்​சித்து வீடியோ வெளி​யிட்​டார். சமீபத்​தில் கூடதனது யூடியூப்​பக்​கத்​தில் தமிழக தொழில்​துறை அமைச்​சர் கீர்த்​தனா குறித்து விமர்​சித்​தார். இது சர்ச்​சையை ஏற்​படுத்​தி​யது. குறிப்​பாக, செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) தொழில்​நுட்​பத்​தைப் பயன்​படுத்தி உரு​வாக்​கப்​பட்ட புகைப்​படம் ஒன்றை வெளி​யிட்​டு, அமைச்​சரின் நற்​பெயருக்​குக் களங்​கம் விளைவிக்​கும் வகை​யில் மட்​டும் அல்​லாமல் இழி​வாக​வும், ஆபாச​மாக​வும் கருத்து பதி​விட்​ட​தாக மாரி​தாஸ் மீது சென்னை காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் புகார் அளிக்​கப்​பட்​டது.

இதுகுறித்து உரிய விசா​ரணை நடத்த காவல் ஆணை​யர் அமல்​ராஜ் உத்​தர​விட்​டார். இதையடுத்​து, சென்னை மத்​திய குற்​றப்​பிரி​வில் உள்ள சைபர் க்ரைம் போலீ​ஸார் விசா​ரணை நடத்​தினர். இதற்​கிடை​யில் மதுரை கடச்​சனேந்​தல் பகு​தி​யிலுள்ள அவரது சகோ​தரர் வீட்​டில் மாரி​தாஸ் தங்கி இருப்​பது தெரிந்​தது. இதைத்​தொடர்ந்து காவல் உதவி ஆணை​யர் வெற்​றிவேந்​தன் தலை​மை​யில் 10-க்​கும்மேற்​பட்ட போலீ​ஸார் நேற்று காலை மதுரை சென்​றனர். பின்​னர் உள்​ளூர் போலீ​ஸார் உதவி​யுடன் மாரி​தாஸை கைது செய்து சென்னை அழைத்து வந்​தனர். தொடர்ந்து அவரை சிறை​யில் அடைப்​ப​தற்​கான நடவடிக்கை எடுக்கப்பட்​டது.

மாரி​தாஸ் கைதுக்கு பல்​வேறு தரப்​பிலிருந்து கண்​டனம் எழுந்​துள்​ளது.

அதி​முக எக்ஸ் பதிவு: மாரி​தாஸை விசா​ரிக்க வேண்​டும் என்​றால் நோட்​டீஸ் கொடுத்து அழைத்​திருக்​கலாமே, எதற்கு கைது செய்ய துடிக்​கிறீர்​கள், ஜனநாயகக் குரலை நெறிக்க முயலும் பொய்க்​கால் குதிரை அரசின் அராஜகப் போக்கு கடும் கண்​டனத்​துக்​குரியது.

அமமுக பொதுச் செய​லா​ளர் டிடிவி தினகரன்: கருத்​துச் சுதந்​திரத்தை நசுக்​கும் செயலை இத்​துடன் நிறுத்​தி​விட்​டு, விமர்​சனங்​களை எதிர்​கொண்டு ஆக்​கப்​பூர்​வ​மான செயல்​பாடு​களை முதல்​வர் முன்​னெடுக்க வேண்​டும்​.

பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை: ஆட்​சி​யில் குறை​பாடு​கள் இருப்​ப​தாக தகுந்த தரவு​களு​டன் கூறி, அதனை திருத்​திக் கொள்ள வேண்​டும் என்​று​தான் மாரிதாஸ் குறிப்​பிட்​டார். அதற்​காக அவர் கைது செய்​யப்​படு​வது கண்​டிக்​கத்​தக்​கது.

நாதக தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான்: மாரி​தாஸின் கருத்​துகள் அவதூறானவை எனக் கருதி​னால் சட்​டப்​படி​யாக வழக்​குத்தொடுக்​கலாம். மாறாக, கைது என்​பது ஜனநாயக விரோத​ம். முந்​தைய திமுக அரசு செய்த கருத்​துரிமை​யின் கழுத்தை நெரிக்​கும் அதே செயலை தவெக அரசும் தொடர்​வதற்கு பெயர்தான் தூய சக்​தி​யா?

<div class="paragraphs"><p>மதுரையில் கைது செய்யப்பட்ட மாரிதாஸ்</p></div>
நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய வீரர் பிரக்ஞானந்தாவுக்கு ரூ.50 லட்சம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in