ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட முதல் தனியார் ராக்கெட் ‘விக்ரம்-1’ வெற்றி

அமெரிக்கா, சீனாவை அடுத்து விண்வெளித் துறையில் இந்தியா புதிய வரலாற்றுச் சாதனை
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இந்தியாவின் முதல் தனியார் ஆர்பிட்டல் ராக்கெட் ‘விக்ரம்-1’ நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.  படம்: பிடிஐ

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இந்தியாவின் முதல் தனியார் ஆர்பிட்டல் ராக்கெட் ‘விக்ரம்-1’ நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. படம்: பிடிஐ

Updated on
2 min read

ஸ்ரீஹரிகோட்டா: அமெரிக்​கா, சீனா​வை அடுத்து இந்​தி​யா​வின் முதல் தனி​யார் ஆர்​பிட்​டல் ராக்​கெட் ‘விக்​ரம்​-1’ வெற்​றிகர​மாக விண்​ணில் பாய்ந்து சாதனை படைத்​தது.

இந்​தி​யா​வில் ‘இஸ்​ரோ’ (இந்​திய விண்​வெளி ஆராய்ச்சி நிறு​வனம்) மூல​மாக செயற்​கைக் கோள்​களை ஏவுதல், சந்​திர​யான் போன்ற பல்​வேறு திட்​டங்​கள் வெற்​றிகர​மாக செயல்​படுத்​தப்​பட்டு வரு​கின்​றன. இந்த நிலை​யில், விண்​வெளித் துறை​யில் தனி​யார் பங்​களிப்பையும் அனு​ம​திக்​கும் உத்​தரவை பிரதமர் மோடி கடந்த 2020-ம் ஆண்டு பிறப்​பித்​தார்.

இதையடுத்​து, 2022 நவ.18-ம் தேதி ஹைத​ரா​பாத்​தைச் சேர்ந்த ‘ஸ்​கைரூட் ஏரோஸ்​பேஸ்’ என்ற தனி​யார் நிறு​வனம் ‘விக்​ரம்​-எஸ்’ என்ற சப்​-ஆர்​பிட்​டல் வகை சிறிய ராக்​கெட்டை தயாரித்து வெற்​றிகர​மாக விண்​ணில் செலுத்​தி​யது. இதைத் தொடர்ந்​து, அந்த நிறு​வனம் தனது முதல் ஆர்​பிட்​டல் வகை ராக்​கெட்டை விண்​ணில் செலுத்​து​வதற்​கான திட்​டத்தை வடிவ​மைத்​தது. அதன்​படி, ‘விக்​ரம்​-1’ ராக்​கெட் வடிவ​மைக்​கப்​பட்​டது. 22 மீட்​டர் உயரம், 1.7 மீட்​டர் விட்​டம் கொண்ட இந்த ராக்​கெட்​டில் முதல்​முறை​யாக உள்​நாட்​டிலேயே முப்​பரி​மாண (3டி) பிரின்​டிங் தொழில்​நுட்​பத்​தில் தயாரிக்​கப்​பட்ட இன்​ஜின், அதிக உந்​து​விசை கொண்ட திட எரிபொருள் பூஸ்​டர்​கள் போன்​றவை பயன்​படுத்​தப்​பட்​டுள்​ளன.

ராக்​கெட் ஏவுதலுக்​கான இறு​திக்​கட்ட பணி​கள் முடிந்​ததை தொடர்ந்​து, இன்​-ஸ்​பேஸ் மற்​றும் இஸ்​ரோ​வின் ஒருங்​கிணைப்​புடன் ஆந்​திர மாநிலம் ஸ்ரீஹரி​கோட்​டா​வில் உள்ள சதீஷ் தவான் விண்​வெளி மையத்​தின் முதலா​வது ஏவுதளத்​தில் இருந்து நேற்​று காலை 11.30 மணிக்கு ‘விக்​ரம்​-1’ ராக்​கெட், விண்​ணில் செலுத்​தப்​படும் என அறிவிக்​கப்​பட்​டிருந்தது. இந்த பயணத்​துக்கு ‘மிஷன் ஆகமன்’ என பெயரிடப்​பட்​டிருந்​தது.

நேற்று ஏவுதலுக்​காக ராக்​கெட் தயா​ராக இருந்​த​போது தொழில்​நுட்​பக் கோளாறு ஏற்​பட்​ட​தால், கவுன்ட்​-ட​வுன் நேரத்தை தாண்டி கூடு​தலாக 35 நிமிடங்​கள் ராக்​கெட் புறப்​பாடு நிறுத்தி வைக்​கப்​பட்​டது. கோளாறு சரிசெய்​யப்​பட்​டு, 12.05 மணிக்கு ‘விக்​ரம்​-1’ ராக்​கெட் விண்​ணில் செலுத்​தப்​பட்​டது. அதிவேக​மாக விண்​ணில் பயணித்த ராக்​கெட் அடுத்​தடுத்த நிலைகளை துல்​லிய​மாக கடந்​து, 450 கி.மீ. தொலை​வில் உள்ளதிட்​ட​மிட்ட சுற்​று​வட்​டப் பாதையை 16 நிமிடங்களில் அடைந்​தது.

இதையடுத்​து, இத்​திட்​டம் வெற்றி பெற்​ற​தாக விஞ்​ஞானிகள் அறி​வித்​தனர். இதன்​மூலம் அமெரிக்​கா, சீனா​வைத் தொடர்ந்து புவி சுற்​று​வட்​டப் பாதை​யில் தனி​யார் ஆர்​பிட்​டல் ஏவு​திறன் கொண்ட உலகின் 3-வது நாடாக இந்​தியா உரு​வெடுத்​துள்​ளது.

இதையடுத்து, ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் குழுவினரை பிரதமர் மோடி, தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்தினார். பின்​னர், காணொலி வாயி​லாக மத்​திய விண்​வெளித் துறை இணை அமைச்​சர் ஜிதேந்​திர சிங் பேசும்​போது, ‘‘விண்​வெளித் துறை​யில் தனியார் நிறுவனங்களுக்கும் பிரதமர் அனுமதி வழங்கியதால், இந்த வரலாற்றுத் தருணத்தை காணும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

விண்​வெளித் துறை சார்ந்த ஸ்டார்ட்​அப் நிறு​வனங்​களின் எண்​ணிக்கை 400-க்கு மேல் உயர்ந்​துள்​ளது. இந்​தி​யா​வின் விண்​வெளி பொருளா​தா​ரம் 9 பில்​லியன் அமெரிக்க டாலர்​களை நெருங்​கி​யுள்​ளது. இது அடுத்த 10 ஆண்​டு​களில் 45 பில்​லியன் டால​ராக உயரும்’’ என்​றார்.

இந்த பயணத்​தில் ‘விக்​ரம்​-1’ ராக்​கெட்​டுடன், விண்​வெளிக் கழி​வு​களை அகற்​றும் ரோபோடிக் கைகள் கொண்ட காஸ்​மோசர்வ் ஸ்பேஸ் நிறு​வனத்​தின் ‘எம்​பிரேஸ்’ கருவி, ஜெர்​மனி​யின் விண்​வெளி சோதனை கருவி​கள், எதிர்​கால விண்​வெளி பயணங்​களுக்​கான புதிய தொழில்​நுட்​பங்​களை பரிசோ​திப்​ப​தற்​காக ‘ஸ்​கைரூட் ஏரோஸ்​பேஸ்’ நிறு​வனம் உரு​வாக்​கிய ‘ஸ்​கோப்’ செயற்​கைக் கோள், பூமி​யின் தாழ்​வான சுற்​றுப்​பாதை​யில் புதிய தொழில்​நுட்ப திறன்​களை சோதிக்​கும் வகை​யில் உரு​வாக்​கப்​பட்ட ‘கிரஹா ஸ்பேஸ்’ நிறு​வனத்​தின் சிறிய செயற்​கைக் கோள் ஆகிய​வை​யும் அனுப்​பப்​பட்​டுள்​ளன.

ராக்கெட்டில் கலாம் சிற்பம்: காஸ்​மோஸ் டைமண்ட்ஸ் ஆய்​வகத்​தில் உரு​வாக்​கப்​பட்ட செயற்கை வைர​மும், 18 காரட் தங்​கத்​தில் உரு​வாக்​கப்​பட்ட சிறிய ராக்​கெட்​டில், இந்​திய விண்​வெளித் திட்​டத்​தின் முன்​னோடிகளான டாக்​டர் விக்​ரம் சாரா​பாய், சர் சி.​வி.​ராமன், அப்​துல்​கலாம் ஆகியோரின் நுண்​ணிய சிற்​பங்​களும் விண்​வெளிக்கு அனுப்​பப்​பட்​டுள்​ளன. இத்​துடன் பிரதமர் மோடி ‘வந்தே மாதரம்’ என எழு​திய வாழ்த்து அட்​டை​யும் அதில் உள்​ளது.

செய்​தி​யாளர்​களிடம் இஸ்ரோ தலை​வர் வி.​நா​ராயணன் கூறும்​போது, ‘‘விண்​வெளி சீர்​திருத்​தம் அறிவிக்​கப்​பட்ட சில ஆண்​டு​களி​லேயே ஒரு ஸ்டார்ட்​அப் நிறு​வனத்​தால் வடிவ​மைக்​கப்​பட்ட முதல் ராக்​கெட், அதன் முதல் முயற்​சி​யிலேயே வெற்​றிகர​மாக சுற்​றுப்​பாதை​யில் நிலைநிறுத்​தப்​பட்​டுள்​ளது. ஸ்கைரூட் நிறு​வனத்​துக்கு வாழ்த்​துகள்.

இது ஒரு தொடக்​கம் மட்டுமே. இந்த நிதி ஆண்​டில் 6 முதல் 7 ராக்​கெட்​களை விண்​ணில் செலுத்ததிட்​ட​மிட்​டுள்​ளோம். குலசேகரபட்​டினம் ஏவுதளம் அமைக்​கும் பணி​கள் 2027 மார்ச்சில் நிறைவடை​யும்’’ என்​றார்.

இந்த நிகழ்​வில் ஆந்​திர மாநில தொழில்​நுட்​பத் துறை அமைச்​சர் நாரா லோகேஷ், இன்​-ஸ்​பேஸ் தலை​வர் பவன் குமார் கோயங்​கா, சதீஷ் தவான் விண்​வெளி மையத்​தின் இயக்​குநர் முத்​துசெழியன் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்​.

<div class="paragraphs"><p>ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இந்தியாவின் முதல் தனியார் ஆர்பிட்டல் ராக்கெட் ‘விக்ரம்-1’ நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.  படம்: பிடிஐ</p></div>
“சோனம் வாங்சுக்கின் பொறுமையை சோதிக்கக் கூடாது” - மத்திய அரசுக்கு அண்ணா ஹசாரே வலியுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in